பத்திரிகையாளர்களின் பிள்ளைகளை பாராட்டி, ஊக்க பரிசளிக்கும் விழா
தேர்வில் சாதித்த பத்திரிகையாளர்களின் பிள்ளைகளை பாராட்டி, ஊக்க பரிசளிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு இந்து அறநிலை துறை அமைச்சர் திரு.பி.கே சேகர்பாபு சென்னை மேயர் திருமதி. பிரியா ராஜன், மூத்த பத்திரிகையாளர் திரு. நக்கீரன் கோபால், கல்வியாளர்கள் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு, திருமதி நித்யா செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ .15, 000, மூன்றாம் பரிசாக ரூ 10,000 என மொத்தம் 13 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

0 Comments